மெத்தப்படித்த மேதாவிகள் ஆளும் நாட்டில்
கற்க சென்ற மலர்கள் கல்லறையாவதும் ..
காந்தி ஏங்கிய இரவு நேரத்து சுதந்திரம் வருமுன்பு
பகல் நேரத்து பேருந்து பருந்துகளால் பெண்கள் பந்தாடப்படுவதும் ...
சில நூறு மைல் தூரத்தில் கொத்து கொத்தாய் நம்மினம் சூறையாடப்பட
எதையுமே கண்டு கொள்ளாத நம் மனிதம் அறுபட ஆரம்பித்ததும்
காமராஜர் வழி அரசியல் மாறி காட்டி கொடுக்கும்
அநாகரிகம் மட்டும் அரசியல் என்றானதும்
மணலையும் திருடி காசு பார்க்கும் corporate உலகில்
பொதுநலம் புதைந்து தன்னலம் மட்டும் தழைத்த அன்றே
மயன் சொல்லாமல் உலகம் அழியத்தொடங்கியாயிற்று
இனியாவது உணர்வோம், மாற முயல்வோம், நல்லவைகள் மட்டும் நடக்கட்டும்
நேற்று காற்றோடு போகட்டும் வரும் நாளை ஆயினும்
நன்நாளாய் அமையட்டும்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...