Sunday, October 20, 2013

என் சக இந்தியனே !!!

 
என் சக இந்தியனே !
உன்னிடம்  மொழி கேட்கவில்லை, உன் மதம் கேட்கவில்லை,
உன் மாநிலம்  கேட்கவில்லை..
இக்கடல் கடந்த தேசத்தில்
நீயும் என்னினமாய் எண்ணி எதிர்பார்ப்பது
எதிர் படுகையில், ஒரு புன் முறுவலோ, தலையாட்டுதலோ,
கை காட்டுதலோ மட்டும் தான்...

Wednesday, December 26, 2012

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2013

மெத்தப்படித்த மேதாவிகள் ஆளும் நாட்டில்
கற்க சென்ற மலர்கள் கல்லறையாவதும் ..
காந்தி ஏங்கிய இரவு நேரத்து சுதந்திரம் வருமுன்பு
பகல் நேரத்து பேருந்து பருந்துகளால் பெண்கள் பந்தாடப்படுவதும் ...
சில நூறு மைல் தூரத்தில் கொத்து  கொத்தாய் நம்மினம் சூறையாடப்பட
எதையுமே கண்டு கொள்ளாத நம் மனிதம் அறுபட ஆரம்பித்ததும்
காமராஜர்  வழி அரசியல் மாறி காட்டி கொடுக்கும்
அநாகரிகம் மட்டும் அரசியல் என்றானதும்
மணலையும் திருடி காசு பார்க்கும் corporate உலகில்
பொதுநலம் புதைந்து தன்னலம் மட்டும் தழைத்த அன்றே
மயன் சொல்லாமல் உலகம் அழியத்தொடங்கியாயிற்று 
இனியாவது உணர்வோம், மாற முயல்வோம், நல்லவைகள் மட்டும் நடக்கட்டும்

நேற்று காற்றோடு போகட்டும் வரும் நாளை ஆயினும்
நன்நாளாய் அமையட்டும்..

 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... 

Tuesday, August 10, 2010

அன்பினால் விளைந்த...

ப்ளாக்கில் கால் பதிக்க, நேற்றைய பின்னிரவு விழிப்பும் ஒரு காரணமாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி...இல்லேயேல் இந்த வார விகடனில் 'சுடச்சுட' சுட்ட எம் பி உதயசூரியனை 'சுடச்சுட' சந்தித்து இருக்க வாய்ப்பில்லை தான்..

நன்றி விகடன்.
பல்வேறு தளங்களில் தொடர்ந்து 'ப்ளாக' விருப்பத்துடன்...
அன்பிற் பிரியன்...